மலேசியாவின் 10ஆவது பிரதமராகிறார் அன்வார் இப்ராஹிம்

பெட்டாலிங் ஜெயா: நாட்டின் அடுத்த பிரதமராக அன்வார் இப்ராஹிம் நியமிக்கப்படுகிறார். பக்காத்தான் ஹராப்பான் தலைவர் மலேசியாவின் 10ஆவது பிரதமராக பதவி வகிப்பார்.  மலேசியாவின் 10வது பிரதமராக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று மாலை பதவியேற்கிறார்.

மாமன்னர் ஆட்சியாளர்களை சந்தித்த பிறகு பிரதமரை நியமிக்க முடிவு செய்தார் என்று  இஸ்தானா நெகாராவின்  மேற்பார்வையாளர் டத்தோஸ்ரீ அஹ்மட் ஃபாதில் ஷம்சுடின் ஒரு அறிக்கையில் இந்த விஷயத்தை உறுதிப்படுத்தினார். அன்வார் இன்று மாலை 5 மணிக்கு பதவியேற்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here