சாங்லூன், நவம்பர் 29 :
ஜாலான் K-16, கம்போங் பெலுகார் என்ற இடத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்த மின்கம்பங்களுக்கு அருகில் மூன்று சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தபோது, மின்கம்பம் விழுந்ததில், ஒரு சிறுவன் இறந்துவிட்டதாகவும் அவரின் இரு நண்பர்கள் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
குபாங் பாசு மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் ரோட்ஸி அபு ஹாசன் கூறுகையில், சிறுவன் தலையில் காயங்களால் இறந்ததாகக் கூறினார்.
இறந்தவருக்கு 10 வயது இருக்கும் என்றும், அவரது உடல் அடுத்த நடவடிக்கைக்காக அலோர் ஸ்டாரில் உள்ள மருத்துவமனை சுல்தானா பஹியாவின் தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டது என்றும் அவர் கூறினார்.
“10 மற்றும் 11 வயதுடைய மற்ற இரு நண்பர்கள் தொடை மற்றும் இடுப்பில் காயம் அடைந்தனர் என்றும், காயமடைந்த இருவரும் ஜித்ரா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர்.
“விசாரணையின் அடிப்படையில் இந்தச் சம்பவ இடத்தில் குற்றச் செயல் எதுவும் இல்லை என்பது கண்டறியப்பட்டது” என்று அவர் மேலும் கூறினார்.