2 DPM, 25 உறுப்பினர்களைக் கொண்டது அன்வாரின் அமைச்சரவையா?

அன்வார் இப்ராஹிமின் 25 உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவையில் இரண்டு துணைப் பிரதமர்கள் இருப்பார்கள் என்று ஒரு வட்டாரம் கூறுகிறது. துணைப் பிரதமர்கள் கபுங்கன் பார்ட்டி சரவாக் (GPS) மற்றும் பாரிசான் நேஷனல், குறிப்பாக அம்னோவில் இருந்து வருவார்கள் என்று அந்த வட்டாரம் தெரிவித்தது.

பிகேஆர், அம்னோ, டிஏபி, ஜிபிஎஸ் ஆகியவற்றுக்கு அதிக அமைச்சர் பதவிகள் வழங்கப்பட வாய்ப்புள்ளது. பக்காத்தான் ஹராப்பான் தலைவரின் அமைச்சரவையில் வாரிசன், அமானா மற்றும் உப்கோ ஆகியோரும் இடம்பெற உள்ளனர். அன்வார் தனது அமைச்சரவையை நாளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அந்த வட்டாரம் தெரிவித்தது. 10ஆவது பிரதமராக தம்புன் நாடாளுமன்ற உறுப்பினரான அன்வார் கடந்த வியாழன் அன்று பதவியேற்றார்.

முன்னதாக, தோக் மாட் என்று அழைக்கப்படும் அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசான், இரண்டு துணைப் பிரதமர் பதவிகளில் ஒன்றிற்கு முன்னோடியாக இருப்பார் என்று கூறப்பட்டது. இரண்டாவது துணைப் பிரதமராக வாரிசான் தலைவர் ஷஃபிஅப்டல் நியமிக்கப்படுவார் என்றும் செய்திகள் வெளியாகின.

டிஏபி தலைவர் லிம் குவான் எங் மற்றும் மூடாவின் தலைவர் சையத் சாதிக் சையத் அப்துல் ரஹ்மான் உட்பட, BN தலைவர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடி மற்றும் நீதிமன்ற வழக்குகளில் உள்ள மற்ற  நாடாளுமன்ற உறுப்பினர்களை அவரது அமைச்சரவையில் சேர்க்க வேண்டாம் என்று அன்வாரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் நேற்று, பிகேஆர் முன்னாள் துணைத் தலைவர் தியான் சுவா, அன்வாரின் அரசாங்கத்தை நிலைநிறுத்துவதில் ஜாஹிட் முக்கியப் பங்காற்ற முடியும் என்றும், BN கூட்டாக ஒற்றுமை அரசாங்கத்தை அமைப்பதில் ஏற்கெனவே முக்கியப் பங்காற்றியுள்ளார்  என்றும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here