அன்வார் நிதியமைச்சராக இருப்பது மோதலை தவிர்க்கவே என்கிறார் ரஃபிஸி

பிரதமர் அன்வார் இப்ராஹிம் நிதியமைச்சராகப் பொறுப்பேற்றிருப்பது    அனைத்து கூட்டணி கட்சிகளுக்குமிடையில் ஒற்றுமையை பலப்படுத்தும்   என்று பொருளாதார விவகார அமைச்சர் ர ஃபிஸி ரம்லி கூறினார்.

ஒற்றுமை  அரசாங்கத்தை அமைக்கும் கூட்டணிகள் மற்றும் கட்சிகளுக்கு இடையேயான மோதலைத் தடுக்க அன்வார் இந்த பதவியை  ஏற்றுள்ளார்.  எந்தக் கட்சிக்கும் அரசாங்கத்தை அமைக்க பெரும்பான்மை இல்லை, ஆனால் அதே நேரத்தில் பொருளாதாரத்திற்கு வலுவான தலைமை தேவை என்று   கூறினார் .

ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் நிதியமைச்சர் பதவியை விரும்புவதை நாங்கள் அறிவோம், எனவே மோதலைத் தவிர்ப்பதற்குப் பிரதமர்   இந்த பதவியை  ஏற்றுக்கொள்வது மிகவும் அர்த்தமுள்ளது என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here