கோலாலம்பூர்: ‘இஸ்மாயில் சப்ரி dilantik Pengerusi Petronas’ என்ற தலைப்பில் சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்தி தவறானது என்று பிரதமர் துறை (JPM) இன்று தெளிவுபடுத்தியுள்ளது.
சரிபார்க்கப்படாத எந்த தகவலையும் பரப்பவோ அல்லது பகிரவோ வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு நினைவூட்டுகிறது.
JPM தனது முகநூல் பதிவில், சரிபார்க்கப்பட்ட செய்திகளுக்கு பிரதமர் துறையின் உத்தியோகபூர்வ சமூக ஊடக கணக்குகளைப் பார்க்குமாறு பொதுமக்களை வலியுறுத்தியது, அதாவது Facebook இல் ‘Jabatan Perdana Menteri’; Twitter @jpmgov; Instagram @jabatanperdanamenteri மற்றும் TikTok @jpmgov.
முன்னதாக, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் ஆகியோருக்கு இடையேயான சந்திப்பின் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலானது, இது அன்வார் கொள்கையளவில் பெட்ரோனாஸ் தலைவராக இஸ்மாயில் சப்ரியை நியமிக்க ஒப்புக்கொண்டதாகக் கூறுகிறது.