5 சட்டவிரோத குடியேறிகளை கடத்தும் முயற்சி போலீசாரால் முறியடிப்பு – உள்ளூர் ஆடவர் கைது

குவா மூசாங், டிசம்பர் 8 :

நேற்று, இங்குள்ள ஜாலான் குவா மூசாங்-கோலா லிப்பிஸின் கிலோமீட்டர் 5 இல், மியன்மார் நாட்டு சட்டவிரோத குடியேறியகள் ஐந்து பேரை ஏற்றிச்சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதில், அவர்களை கடத்திச் செல்ல உள்ளூர் வெல்டர் ஒருவர் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது.

மாலை 6 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், 31 வயதான கார் ஓட்டுநர், மற்றும் மியன்மாரைச் சேர்ந்த 16 முதல் 42 வயதுடைய மூன்று ஆண்கள் மற்றும் இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த காரை 15 கிலோமீட்டர் போலீஸார் துரத்தலுக்குப் பிறகு, கார் விபத்துக்குள்ளானது என்று குவா மூசாங் மாவட்ட காவல்துறைத் தலைமைக் கண்காணிப்பாளர் சிக் சூன் ஃபூ கூறினார்.

கடத்தல் சந்தேக நபர் குறித்த சட்ட விரோத குடியேறிகளை ரந்தாவ் பாஞ்சாங்கில் இருந்து பஹாங்கின் பெந்தோங்கிற்கு அனுப்புவதற்காக அழைத்துச் சென்றதாக நம்பப்படுகிறது.

“மேலும் விசாரணையில், சந்தேக நபர் அவர் கொண்டு வந்த ஒவ்வொரு சட்டவிரோத குடியேறிக்கும் RM250 பெற்றார்.

மேலும் ” யாபா என்று நம்பப்படும் போதை மாத்திரைகளை வைத்திருந்தார் என்றும், மேலும் சிறுநீர் பரிசோதனையில் சந்தேக நபருக்கு மெத்தம்பேட்டமைன் இருப்பது கண்டறியப்பட்டது,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here