கோலாலம்பூர்:
நேற்றிரவு, புக்கிட் ஜலீல் தேசிய மைதானத்தில் 65,000 க்கும் மேற்பட்ட ரசிகர்கள் முன்னிலையில் நடந்த 2022 ஆம் ஆண்டுக்கான ஆசியான் காற்பந்து கூட்டமைப்பு (AFF) கிண்ணக் காற்பந்துப் போட்டியில், சிங்கப்பூருக்கு எதிராக விளையாடிய மலேசிய அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது.
இது தான் பார்த்த சிறந்த ஆட்டங்களில் ஒன்று என்று தேசிய காற்பந்து தலைமைப் பயிற்சியாளர் கிம் பான் கோன் விவரித்தார்.
“விளையாட்டரங்கில் மலேசிய அணியினர் தமது அபார திறமையை வெளிப்படுத்தினர் . இதில் அவ்வணியினரின் சிறந்த ஒற்றுமை உணர்வைக் காட்டியுள்ளது மற்றும் காற்பந்து ரசிகர்களுக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது,” என்றும் அவர் போட்டிக்கு பின்னர் நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
அரையிறுதிக்கு முன்னேறிய மலேசிய காற்பந்து அணி அடுத்து தாய்லாந்து அணியுடன் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.