PPR பத்து மூடா அருகேயுள்ள கடைத் தொகுதியில் தீப்பரவல்- 5 கடைகள் எரிந்து நாசம்

பத்து மூடா மக்கள் வீட்டுத் திட்டத்தின் (PPR) பிளாக் C அருகே உள்ள கடைத் தொகுதியில், இன்று பிற்பகல் ஏற்பட்ட தீயில் ஐந்து கடைகள் எரிந்து நாசமாகியது.

குறித்த சம்பவம் தொடர்பில், கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (JBPM) கோலாலம்பூர் செயல்பாட்டு மையத்திற்கு இன்று நண்பகல் 1 மணியளவில் அவசர அழைப்பு வந்ததைத் தொடர்ந்து, தீயணைப்பு வீரர்கள் குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டது.

நடவடிக்கை கமாண்டர், முஹம்மே பைசோன் இஸ்மாயில் கூறுகையில், கோம்பாக் செலாத்தான், ஜின்ஜாங் மற்றும் செந்துல் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் செயல்பாட்டுக் குழு ஆகியோரின் உதவியுடன் 21 உறுப்பினர்களின் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்ததாக கூறினார்.

குழு சம்பவம் நடந்த இடத்திற்கு வந்தபோது, ​​ஐந்து கடைகளில் தீப்பற்றி எரிவதை கண்டதாகவும், இதில் உயிரிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.

“தீ விபத்துக்கான காரணம் மற்றும் மதிப்பிடப்பட்ட இழப்பு இன்னும் விசாரணையில் உள்ளது,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here