பினாங்கு மலேசிய சுங்கத் துறையினர் மேற்கொண்ட மூன்று வெவ்வேறு நடவடிக்கைகளில் 1.6 டன்களுக்கும் அதிகமான பட்டாசுகளைக் கைப்பற்றியுள்ளதாக பினாங்கு சுங்கத் துறை இயக்குநர், ஹமிசான் காலிப் கூறினார்,
கடந்த ஜனவரி 9 ஆம் தேதி அதிகாலை 4.30 மணியளவில் ஜார்ஜ் டவுனில் உள்ள ஒரு கடையில் சோதனை நடத்தியதைத் தொடர்ந்து, சீனப் புத்தாண்டிற்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள் கைப்பற்றப்பட்டதாகவும், அந்த வளாகத்தில் சோதனை நடத்தியதில் 1,648.37 கிலோ எடையுள்ள 463 பட்டாசு பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன,” என்றும் ஹமிசான் கூறினார்.
மேலும் 30 முதல் 42 வயதுக்குட்பட்ட மூவர் கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்தப் பட்டாசுகள் தாய்லாந்திலிருந்து தரை வழியாகவும், முறையான ஆவணங்கள் இன்றியும் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன, மேலும் அறிவிக்கப்படாத பொருட்களைப் பாதுகாத்தல், சேமித்தல், மறைத்தல் மற்றும் வைத்திருந்தமை தொடர்பாக சுங்கச் சட்டம் 1967 பிரிவு 135(1)(d)ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் அவர் கூறினார்.
இது குற்றம் நிரூபிக்கப்பட்டால், அது பொருட்களின் மதிப்பை விட 10 மடங்கு அல்லது RM50,000 அபராதம் விதிக்கிறது, எது பெரிய தொகையோ, பொருட்களின் மதிப்பை விட 20 மடங்கு அல்லது RM500,000, எது பெரியதோ, அ ஐந்து ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.