ஜோகூர், சபாவை தொடர்ந்து பகாங்கிலும் வெள்ளம்

ஜோகூர் மற்றும் சபாவை தொடர்ந்து, இன்று பகாங் மாநிலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு ரோம்பின் மாவட்டத்தில் 28 குடும்பங்களைச் சேர்ந்த 97 பேர் தங்கள் வாழ்விடங்களைவிட்டு வெளியேறி, அங்குள்ள மூன்று தற்காலிக நிவாரண மையங்களில் தஞ்சமடைந்துள்ளனர் என்று சமூக நலத் துறையின் (JKM) பேரிடர் தகவல் போர்ட்டலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரொம்பினில் உள்ள கெராடோங் ஆற்றின் நீர்மட்டம் 23.19 மீட்டராக உயர்ந்து அதன் அபாய அளவைத் தாண்டியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here