SPM தேர்வெழுதும் பரீட்சாத்திகளுக்கு பிரதமர் வாழ்த்து

2022ஆம் ஆண்டுக்கான சிஜில் பெலாஜாரான் மலேசியா (SPM) தேர்வை இன்று எழுகின்ற அனைத்து பரீட்சாத்திகளுக்கும் தனது நல்வாழ்த்துக்களை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

“உங்கள் SPM தேர்வுகளில் வெற்றி பெற வாழ்த்துக்கள். Selamat maju jaya,” என்று, நேற்று வெளியிட்டிருந்த ஒரு முகநூல் பதிவில் பகிர்ந்து கொண்டார், மேலும் அவர்களின் முயற்சிகளும் கடின உழைப்பும் அவர்களுக்கு வெற்றியைக் கொண்டு வர வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்றும் கூறினார்.

403,637 SPM விண்ணப்பதாரர்கள் இன்று (பிப். 20) முதல் மார்ச் 15 வரை நடைபெறும் தேர்வில் பங்குகொள்ளுகின்றனர் என்று கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள 3,355 தேர்வு மையங்களில் பரீட்சைகள் சுமூகமாக நடைபெறுவதை உறுதிச் செய்வதற்காக மொத்தம் 131,318 பரீட்சை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here