இட்ருஸ் மீண்டும் சட்டத்துறை தலைவராக நியமிக்கப்பட்டதற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை- அசாலினா

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமினின் ஆலோசனையின் பேரில், மாண்புமிகு பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அல்- முஸ்தபா பில்லா ஷாவின் அனுமதியுடன், டான்ஸ்ரீ இட்ருஸ் ஹாருன் மீண்டும் சட்டத்துறை தலைவராக நியமிக்கப்பட்டார். மாறாக சில தரப்பினர் கூறுவது போல், ஆறு மாதங்களுக்கு இட்ருஸை மீண்டும் நியமிக்கும் முடிவிற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று, பிரதமர் துறை அமைச்சர் (சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்தம்) டத்தோஸ்ரீ அசாலினா ஓத்மான் தெரிவித்தார்.

“சட்டத்துறை தலைவரின் பங்கை புதுப்பிக்கும் பணியில் நான் தனிப்பட்ட முறையில் நேரடியாக ஈடுபடவில்லை, ஏனென்றால் அது பிரதமரின் பொறுப்பு, நான் சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்த அமைச்சராக இருந்தாலும் அது என்னுடைய வேலை அல்ல,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here