லுமூட் அருகே 2 படகுகள் மோதிய விபத்தில் மூவர் பலி

லுமூட்டிலுள்ள தேசிய கடற்படை முகாம் (TLDM) அருகேயுள்ள கடற்பகுதியில் நேற்று இரண்டு படகுகள் மோதிய விபத்தில், மூவர் உயிரிழந்தனர்.

இரவு 9 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில், 17 பேருடன் லுமூட்டில் இருந்து பாங்கோர் தீவு நோக்கிச் சென்ற ஒரு படகும், இரண்டு பயணிகளை ஏற்றிக்கொண்டு பாங்கோர் தீவில் இருந்து லுமூட் நோக்கிச் சென்ற ஒரு
மற்றோரு படைக்கும் மோதியதாக, மாஞ்சாங் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் நோர் உமர் சாஃபி கூறினார்.

பாதிக்கப்பட்டவர்களை தேடும் நடவடிக்கை, மாஞ்சாங் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய உறுப்பினர் மற்றும் தேசிய கடற்படையினரின் உதவியுடன் அவரது தரப்பினரும் இணைந்து, இரவு 9.17 மணிக்கு மேற்கொள்ளப்பட்டது.

இந்த மோதலின் விளைவாக, லுமூட் திசையில் இருந்து பாங்கோர் தீவுக்குச் சென்ற படகிலிருந்து 10 பயணிகள் கடலில் விழுந்தனர், பின்னர் சம்பந்தப்பட்ட படகின் இரண்டு கேப்டன்களால் அவர்கள் மீட்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட அனைவரும் கடற்படை மருத்துவமனைக்கு (HAT) சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர்.

இந்நிலையில், 26 முதல் 43 வயதுடைய மூன்று பெண்கள் இறந்துவிட்டதாகவும், மரணத்திற்கான காரணத்தை அடையாளம் காண பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீ மாஞ்சாங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும் கடற்படை மருத்துவமனைக்கு தெரிவித்துள்ளது.

“மற்றொரு 43 வயதான பெண் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும், ஏனைய 17 பாதிக்கப்பட்டவர்கள் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்றும், அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here