யுனிவர்சிட்டி மலாயாவின் சட்ட பீட மூத்த விரிவுரையாளரான டாக்டர் ஃபரா நினி டுசுகி, மலேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (Suhakam) சிறார்கள் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் மார்ச் 8 முதல் மூன்று வருட காலத்திற்கு அமலில் இருக்கும் என்று, பிரதமர் துறை அமைச்சர் (சட்ட மற்றும் நிறுவன சீர்திருத்தம்) டத்தோஸ்ரீ அசாலினா ஓத்மான் உறுதிப்படுத்தினார்.
மலேசிய சட்டம் மனித உரிமைகள் ஆணைய சட்டம் 1999இன் பிரிவு 5(2) இன் படி, ஃபரா நினியின் நியமனத்திற்கு மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா ஒப்புதல் அளித்ததாக இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையின் மூலம் அசாலினா தெரிவித்தார்.