சொந்த நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டபோது படகில் இருந்து குதித்த பிலிப்பைன்ஸ் நாட்டவரின் உடல் மீட்பு

கோத்த கினபாலு: சட்டவிரோதமானவர்களை சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பிய படகில் இருந்து குதித்த 31 வயதான பிலிப்பைன்ஸ் நாட்டவரின் உடல் சண்டகன் கடல் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.

கடலில் குதித்த ரஸ்மெல் அப்துல் ரஹீமின் சடலம், வெள்ளிக்கிழமை (மார்ச் 17) காலை 8.39 மணியளவில், காரமுண்டிங் இரண்டாவது ஜெட்டி இடம் அருகே, கடலில் குதித்த இடத்திலிருந்து சுமார் 600 மீட்டர் தொலைவில் மரைன் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டது.

சண்டகன் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் மற்றும் காவல்துறை இணைந்து உடலை மீட்டு, மேல் நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. காலை 10.12 மணிக்கு  பணி முடிந்தது என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.

புதன்கிழமை (மார்ச் 15) மாலை 6.45 மணியளவில் கப்பலின் நான்காம் நிலை ஜன்னலில் இருந்து பாதிக்கப்பட்டவர் வெளியே குதித்ததை நேரில் பார்த்த படகு மேலாளர், படகுகளில் மேற்பரப்பு மீட்பு மூலம் ஒருங்கிணைந்த தேடுதல் பணியை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

பல்வேறு குடியேற்றக் குற்றங்களைச் செய்த 653 பிலிப்பைன்ஸ் மக்கள், பிலிப்பைன்ஸின் ஜாம்போங்கா நகர துறைமுகத்திற்குச் செல்லும் MV Antonia 1 படகு மூலம் நாடு கடத்தப்பட்டதாக மாநில குடிநுழைவுத் துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here