செகிஞ்சனில் உள்ள மசூதிக்கு அருகில் உள்ள வாய்க்காலில் 7 மீட்டர் நீளமுள்ள மலைப்பாம்பு பிடிக்கப்பட்டுள்ளது. வியாழன் (மார்ச் 30) இரவு 10.38 மணிக்கு தங்களுக்கு ஒரு பேரிடர் அழைப்பு வந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர் மோர்னி மாமத் தெரிவித்தார்.
மொத்தம் 11 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர். பாம்பு அதிக அசம்பாவிதம் இல்லாமல், பொருத்தமான உபகரணங்களைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்டது என்று அவர் வெள்ளிக்கிழமை (மார்ச் 31) தொடர்பு கொண்டபோது கூறினார். சம்பவத்தின் போது எவரும் காயமடையவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.