பாச்சோக்கிலுள்ள கம்போங் பெரிஸ் பஞ்சூரிலுள்ள ஒரு வீட்டில், குழந்தை பிரசவித்து சில நாட்களேயான பெண் ஒருவர் கழுத்தில் கத்தி குத்திய நிலையில், இரத்த வெள்ளத்தில் இறந்து கிடக்க கண்டெடுக்கப்பட்டார்.
நேற்று பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தில், நான்காவது குழந்தையைப் பெற்றெடுத்த 35 வயதுடைய பெண், பூட்டப்பட்ட வீட்டில் இரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்ட பாதிக்கப்பட்டவரின் சகோதரன், வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றதாகவும், அவர் உடனடியாக ஆம்புலன்ஸ்க்கு அவசர அழைப்பை மேற்கொண்டதாகவும், பாச்சோக் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் முகமட் இஸ்மாயில் ஜமாலுடின் கூறினார்.
பிரேதப் பரிசோதனையில் உயிரிழந்தவரின் கழுத்தில் கடுமையான இரத்தக் கசிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது என்றும், சம்பவம் தொடர்பில் விசாரணை தொடர்வதாகவும் கூறினார்.