ஷா ஆலாமிலுள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பின் 15வது மாடியில் இருந்து குதித்து கார் விற்பனையாளர் ஒருவர் மரணம்

ஷா ஆலம், பிரிவு 22ல் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 15வது மாடியில் இருந்து குதித்ததால் கார் விற்பனையாளர் ஒருவர் மரணமடைந்ததாக நம்பப்படுகிறது.

பலியானவரின் உடல் அடுக்குமாடி குடியிருப்பின் ஆறாவது மாடியில் மல்லாக்க படுத்து, அசையாமல் கிடந்த நிலையில் ஒரு பெண்ணால் கண்டுபிடிக்கப்பட்டது என்று, ஷா ஆலாம் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் முகமட் இக்பால் இப்ராஹிம் கூறினார்.

“பாதிக்கப்பட்டவரின் உடலில் மேற்கொண்ட சோதனையின் அடிப்படையில், பாதிக்கப்பட்டவரின் அடையாள அட்டை அடங்கிய சிறிய நீலப் பை கண்டுபிடிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர் 45 வயதானவர் என்றும் கார் விற்பனையாளராக பணிபுரிகிறார் என்றும், மேலும் அவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது என்றும், ” அவர் நேற்று இரவு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

ஆரம்பகட்ட விசாரணைகளின் விளைவாக, இறந்தவர் சூதாட்டம் மற்றும் மதுப்பழக்கம் காரணமாக பாதிக்கப்பட்டிருந்ததன் காரணமாக, குடியிருப்பின் 15-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக நம்பப்படுகிறது என்று அவர் விளக்கினார்.

மேலும் பாதிக்கப்பட்டவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளதால் அவர் மறுவாழ்வு மையத்தில் நேற்று சிகிச்சை பெற வேண்டும் என்று கூறப்படுகிறது.

“இந்த வழக்கு திடீர் மரண அறிக்கை (SDR) என வகைப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் இந்த வழக்கு தொடர்பான எந்த தகவலையும் விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் சைபோல் பைசி ஜைனோலுக்கு 0125781435 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here