தன் சொந்த தாயை கத்தியை காட்டி மிரட்டி, பணம்த்தை மீளப்பெற முயன்ற குற்றச்சாட்டில், மனைவியை இழந்த, மூன்று குழந்தைகளுடன் தனித்து வாழும் ஒரு தந்தைக்கு, மலாக்கா மாவட்ட நீதிமன்றம் 24 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்தது.
குற்றம் சாட்டப்பட்ட வீரா முஹமட் அரிஸ், என்பவருக்கு எதிரான குற்றச்சாட்டு, மாஜிஸ்திரேட் மசானா சினின் முன்னிலையில் நீதிமன்ற மொழிபெயர்ப்பாளரால் வாசிக்கப்பட்டவுடன், 41 வயதான அரிஸ் அக்குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
குற்றப்பத்திரிகையின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டவர் தனது 66 வயது சொந்த தாயை பணம் கேட்கும் கோபத்தில், கத்தியைக் காட்டி பயமுறுத்தும் நோக்கத்துடன் குற்றமிழைத்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.
22 செப்டம்பர் 2022 அன்று மலாக்கா தெங்கா மாவட்டத்தில் உள்ள பெர்த்தாம் மாலிம் என்ற இடத்திலுள்ள அவர்களது வீட்டின் சமையலறையில், சுமார் மாலை 5 மணியளவில் இந்தக் குற்றம் செய்யப்பட்டது.
மே 18, 2023 அன்று அவர் கைது செய்யப்பட்ட நாளிலிருந்து அவர் 24 மாதங்கள் சிறைத்தண்டனையை அனுபவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.