கடந்த வாரம் டிங்கி காய்ச்சல் நோயாளர்கள் எண்ணிக்கை 7.9 சதவீதம் அதிகரிப்பு; மூன்று இறப்புகள் பதிவு

கடந்த மே 21 முதல் 27 வரையிலான 21வது தொற்றுநோயியல் வாரத்தில் (ME21) டிங்கி காய்ச்சல் சம்பவங்களின் எண்ணிக்கை 7.9 சதவீதம் அதிகரித்து, அதாவது 2,638 சம்பவங்களாக அதிகரித்துள்ளது, இவை முந்தைய வாரத்தில் 2,444 வழக்குகள் பதிவாகியுள்ளன.

மேலும் இந்த வாரத்தில் மூன்று இறப்புகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார இயக்குநர்-ஜெனரல் டத்தோ டாக்டர் முஹமட் ராட்ஸி அபு ஹாசன் கூறினார்.

கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் பதிவான 17,496 டிங்கி காய்ச்சல் நோயாளர்களுடன் ஒப்பிடுகையில், இன்றுவரை மொத்தம் 46,257 டிங்கி காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், இது 164.4 விழுக்காடு அதிகரிப்பாகும் எனவும் அவர் கூறினார்.

அத்தோடு கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் டிங்கி காய்ச்சலால் 31 இறப்புகள் பதிவாகியுள்ளன, அதே இந்தாண்டு இதுவரை 10 இறப்புகள் மட்டுமே பதிவாகியுள்ளன என்று அவர் இன்று வெள்ளிக்கிழமை (ஜூன் 2) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here