222 நாடாளுமன்ற தொகுதிகளை 300ஆக உயர்த்த திட்டம் என்ற முஹிடினின் கூற்றுக்கு கண்டனம் தெரிவித்த லிம் குவாங் எங்

வரும் செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெறும் பூலாய் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால், நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை 222ல் இருந்து 300 ஆக உயர்த்தும் வகையில், மத்திய அரசமைப்புச் சட்டத்தை ஒற்றுமை அரசு திருத்தும் என்று முஹிடின் யாசினின் கூற்றை டிஏபி தலைவர் லிம் குவான் எங் விமர்சித்துள்ளார்.

நேற்றிரவு ஜோகூரில் உள்ள கெம்பாஸில் உள்ள PN பிரச்சாரத்தில், பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் முஹிடின்,பூலாய் நாடாளுமன்றத் தொகுதியில் PH-ன் சுஹைசான் கையாட் வெற்றி பெற்றால், PH-BN க்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அளித்து, மக்களவையில்ம் ஒற்றுமை அரசாங்கம் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறும் என்று கூறினார்.

ஹரியான் மெட்ரோ அறிக்கையில், தேர்தல் ஆணையத்தால் மட்டுமே தேர்தல் எல்லைகளை மீண்டும் வரைய முடியும் என்று கூறிய லிம், இந்த விவகாரம் அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் ஒருபோதும் விவாதிக்கப்படவில்லை என்றும் கூறினார். முன்னாள் பிரதமர் என்ற முறையில், அவர் (முஹிடின்) இதை EC தீர்மானிக்கிறது என்பதை (தேர்தல் எல்லைகளை மறுவடிவமைத்தல்) அறிந்திருக்க வேண்டும். சில நேரங்களில், மத்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ள அடிப்படை விஷயங்களைப் புரிந்து கொள்ளாததால், அவர் பிரதமராக இருக்கத் தகுதியானவரா இல்லையா என்று எனக்குச் சந்தேகம் எழுகிறது.

அவரது நிர்வாகம் ‘kerajaan gagal’ (தோல்வியுற்ற அரசாங்கம்) என்று முத்திரை குத்தப்பட்டதில் ஆச்சரியமில்லை என்று   கம்பார் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் கெரஞ்சி மாநிலத் தொகுதிக்கான சேவை மையங்களைத் தொடக்கி வைத்துப் பேசுகையில் லிம் இவ்வாறு கூறினார். டிஏபியின் சோங் ஜெமின் மற்றும் கூ ஹாய் யென் முறையே கம்பார் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் கெரஞ்சி சட்டமன்ற உறுப்பினராக உள்ளனர்.

டிஏபி அதன் கூட்டணிக் கூட்டாளிகளின் பரிந்துரைகளைப் புறக்கணிப்பதன் மூலம் ஒற்றுமை அரசாங்கத்தில் “பெரிய சகோதரனாக” செயல்படுகிறது என்ற பெர்சத்து துணைத் தலைவர் ராட்ஸி ஜிடினின் கூற்றையும் லிம் மறுத்தார். ஒற்றுமை அரசாங்கத்தில் டிஏபிக்கு நான்கு அமைச்சர்கள் மட்டுமே உள்ளனர் என்று சுட்டிக்காட்டிய அவர், அக்கட்சியை எப்படி “பெரிய அண்ணன்” என்று முத்திரை குத்த முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

இதில் நியாயம் எங்கே இருக்கிறது? ஒருவேளை அவருக்கு (ராட்ஸி) கணிதம் புரியாமல் இருக்கலாம். பிரதமர் பதவியோ, துணைப் பிரதமர் பதவியோ கூட எங்களிடம் இல்லை. அவர்கள் (PN) மற்றவர்களை அவதூறாகப் பேசுவதில் வல்லவர்கள். வெற்றிக்காகவும், அதிகாரத்திற்காகவும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை எழுப்புவது உட்பட எதையும் செய்வார்கள் என்பதை பொதுமக்கள் அறிவார்கள் என நம்புகிறேன்  என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here