புத்ராஜெயா:
தங்கள் தொழிலாளர்களின் நலன் மற்றும் உரிமைகளைப் பாதுகாக்கத் தவறியதற்காக, இந்தாண்டு ஜனவரி 1 முதல் மொத்தம் 270 முதலாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது.
இதன்முலம் RM2.17 மில்லியன் மதிப்புள்ள அபராதங்களை மனிதவளத்துறை விதித்துள்ளது என்று அதன் அமைச்சர் வி.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
குறித்த காலப்பகுதியில் 645 முதலாளிகளுக்கு எதிராக 1,321 விசாரணை ஆவணங்கள் திறக்கப்பட்டன என்றும் , அவர்கள் அனைவயிரம் மனிதவளத்துறையால் அமல்படுத்தப்பட்ட சட்டங்களை மீறும் செயல்களைச் செய்தல், மற்றும் கட்டாய உடல் உழைப்பு போன்ற குற்றங்களை உள்ளடக்கியிருந்தன என்றார் அவர்.
சட்டவிரோதமாக ஊதியக் குறைப்பு, வேலை ஒப்பந்தங்கள் மற்றும் ஊதியத்தை வழங்கத் தவறியது, கூடுதல் நேர வேலைக்கான கொடுப்பனவுகளை வழங்கத் தவறியது மற்றும் குறைந்தபட்ச ஊதியத்தை வழங்கத் தவறியது ஆகியவை கண்டறியப்பட்ட இந்தக் குற்றங்களில் அடங்கும் என்று மலேசியாவில் கட்டாயத் தொழிலாளர்களை எதிர்த்துப் போராடும் வழிகாட்டி கையேட்டை வெளியிட்டபோது அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இந்த “அமலாக்க நடவடிக்கை முதலாளிகளுக்கு அபராதம் விதிக்க அல்ல, ஆனால் அவர்களுக்கு பாடம் கற்பிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டது என்றார்.
ஜனவரி 1 முதல் இன்றுவரை, 128 முதலாளிகள் பல்வேறு குற்றங்களுக்காக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டதாகவும், மொத்தம் RM242,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் சிவக்குமார் கூறினார்.