திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே வசித்து வரும் சரஸ்வதி என்ற 81 வயதான மூதாட்டி 45 நிமிடம் 59 விநாடிகளில் 108 முறை சூரிய நமஸ்காரத்தை இடைவிடாமல் செய்து அசத்தியுள்ளார்.
இந்தச் சாதனை, India Book of Records சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. இந்த சாதனையை 45 நிமிடம் 59 வினாடிகளில் செய்து முடித்துள்ளார். மேலும் இச்சாதனையில் அவருடன் இணைந்து இணையம் மூலம் யோகா கற்றுவரும் மாணவ மாணவிகளும் பங்கேற்றனர்.
கடந்த 10 ஆண்டுகளாக யோகாசனத்தில் ஈடுபட்டு வரும் இவர், ஏற்கெனவே லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.










