கோலாலம்பூர்:
தோட்டத் துறையில் தொழிலாளர் மறுசீரமைப்புத் திட்டம் (RTK) 2.0க்கான போலி ஆவணங்களைத் தயாரித்ததாகக் கூறப்படும் இரண்டு உள்ளூர்வாசிகள் கடந்த புதன்கிழமை டேசா பெட்டாலிங்கில் உள்ள ஒரு வளாகத்தில் கைது செய்யப்பட்டனர்.
நிறுவனத்தின் இயக்குநராக நம்பப்படும் ஒரு பெண் மற்றும் நிறுவனத்தின் மேலாளர் என்று நம்பப்படும் ஒரு ஆண், ஆகியோர் குறித்த வளாகத்தில் இருந்தபோது காலை 11 மணியளவில் தடுத்து வைக்கப்பட்டனர் என்று கோலாலம்பூர் குடிநுழைவு துறை இயக்குனர் வான் முகமட் சௌபீ வான் யூசோஃப் கூறினார்.
கோலாலம்பூர் குடிநுழைவுத் திணைக்களத்தின் வெளிநாட்டுப் பணியாளர்கள் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட ஆவணச் சோதனையின் போது, போலி ஆவணங்களைத் தயாரிக்கும் முயற்சியை குடிநுழைவுத் துறை அதிகாரிகள் கண்டறிந்ததாக அவர் மேலும் கூறினார்.
1959/63 குடிவரவு சட்டத்தின் பிரிவு 56 (1) (k) மற்றும் 56 (1A) (c) இன் கீழ் விசாரணைக்காக சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்,” என்று அவர் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
RTK 2.0 திட்டத்திற்காக வெளிநாட்டினரைப் பதிவுசெய்துள்ள அனைத்து முதலாளிகளும் உடனடியாக கோலாலம்பூர் குடிவரவுத் துறையின் RTK 2.0 அலுவலகத்திற்குச் சென்று சரிபார்ப்பு செயல்முறையை முடிக்குமாறு வான் முகமட் சௌபி கேட்டுக் கொண்டார்.
“நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சட்டத்தை அமல்படுத்துவதில் குடிநுழைவுத் துறையாருடனும் சமரசம் செய்யாது” என்று அவர் கூறினார்.