28 வயதான இளம் இசையமைப்பாளர் பிரவீன்குமார் இன்று காலமானார். அவரது மறைவு திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
’இராக்கதன்’, ’மேதகு’ போன்ற படங்களுக்கு இசையமைத்தவர் பிரவீன்குமார். உடல் நலம் பாதிக்கப்பட்ட இவர் இன்று காலை 6.30 மணியளவில் காலமானார். 28 வயதில் இவர் காலமாகி யிருப்பது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாகவே, உடல் நலம் பாதிக்கப்பட்டதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் பிரவீன்குமார். இந்த நிலையில் அவசர சிகிச்சைக்காக நேற்று மதியம் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.