வாகனத்தில் நெருக்கமாக இருந்த ஜோடி: போலீசார் வாகனத்தை மோதி தப்பிச் சென்ற போது கைது

மலாக்காவில் போலீஸ் ரோந்து கார் மீது நான்கு சக்கர வாகனத்தை மோதிய 44 வயது ஆடவரும் அவரது 25 வயது காதலியும் கைது செய்யப்பட்டனர். அலோர் காஜா காவல்துறைத் தலைவர் அஷாரி அபு சாமா கூறுகையில் இரவு 9.45 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. ஏனெனில் இந்த ஜோடி “கல்வாட்” (நெருக்கமான இருந்தற்காக) பிடிபடுவோம் என்று பயந்தார்கள்.

அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு போலீசார் ஃபோர்டு ரேஞ்சரை ஒரு ஒதுக்குப்புறமான இருண்ட இடத்தில் இருப்பதை கண்டனர். பின்னர் போலீசார் தங்கள் வாகனத்தை 4WD க்கு பின்னால் நிறுத்தி  விளக்கை ஆன் செய்து வாகனத்தில் இருந்து அவர்களை வெளியே வருமாறு அழைத்தனர். இருப்பினும், ஓட்டுநர் ஒத்துழைக்க மறுத்து ரோந்து காரின் மீது மோதி, தனது வாகனத்தை பின்னோக்கி தப்ப முயன்றார் பெர்னாமா செய்தி வெளியிட்டிருந்தது. பலமான மோதல் காரணமாக  கண்ணாடி உடைத்ததோடு, ரோந்து காரின் முன் கதவும் சேதமடைந்தது என்று அஷாரி கூறினார். போலீசார் தங்கள் பணியை செய்ய விடாமல் தடுத்ததாக தம்பதியிடம் விசாரணை நடந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here