அமெரிக்காவில் இந்துக் கோயில் அவமதிப்பு

கலிபோர்னியா: 

மெரிக்காவின் கலிபோர்னியாவில் BAPS ஸ்ரீநாராயண் கோயில் அவமதிக்கப்பட்டதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி உள்ளூர் அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக சான்பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணை தூதரகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அதன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “செப்.24-ம் தேதி இரவு சான்பிரான்சிஸ்கோவின் சாக்ரமெண்டோவில் உள்ள பிஏபிஎஸ் ஸ்ரீசுவாமிநாராயண் கோயிலில் நடந்த அவமதிப்புச் செயலை இந்திய துணை தூதரகம் வன்மையாக கண்டிக்கிறது. இந்த விவகாரம் உள்ளூர் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, செப்.24-ம் தேதி கோயில் நிர்வாகத்தின் எக்ஸ் பக்கத்தில், “இந்துக்களே திரும்பிச் செல்லுங்கள்” என்ற முழக்கத்துடன் பிஏபிஎஸ் ஸ்ரீசுவாமிநாராயண் கோயில் அவமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. நியூயார்க்கின் மெல்வில்லேவில் உள்ள பிஏபிஎஸ் கோயில் அவமதிப்புச் சம்பவம் நடந்த அடுத்த நாள் கலிபோர்னியா சம்பவம் நடந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here