சுங்கைபூலோ:
திடீரென மயங்கி விழுந்த புன்சாக் அலாம் UiTM மாணவர் ஒருவர் மரணமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
நேற்று மாலை 5 மணியளவில் குறித்த சம்பவம் நடந்ததாக சுங்கை பூலோ மாவட்ட போலிஸ் தலைவர் முஹமட் ஹஃபீஸ் முஹமட் நோர் கூறினார்.
குறித்த மாணவர், புன்சாக் அலாம் பல்கலைக்கழக வளாகத்திலுள்ள சிற்றுண்டிச் சாலையில் திடீரென மயங்கி விழுந்தார் எனவும், உடனே அவர் UiTM புன்சாக் அலாம் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார் எனவும், பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் எனவும் ஆரம்பகட்ட விசாரணையில் அறியமுடிகிறது என்று அவர் மேலும் கூறினார் .
இந்த சம்பவம் குறித்து இரவு 10.13 மணிக்கு போலிசாருக்கு தகவல் கிடைத்தது எனக் கூறிய அவர், இவ்வழக்கு தொடர்பில் போலீசார் மேலதிக விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர் என்றார்.