கோலாலம்பூர்:
சிங்கப்பூர் உடன் பத்து பூத்தே தீவு தொடர்பான இறையாண்மை விவகாரத்தில் தாம் குற்றவியல் விசாரணையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமட் இன்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 10) நடந்த ஓர் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
பத்து பூத்தே என்று மலேசியா குறிப்பிடும் தீவு மீது சிங்கப்பூருக்கு அரசுரிமை இருப்பதாக அனைத்துலக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மேல்முறையீடு செய்யும் முயற்சிகளை அவர் கைவிட முடிவு செய்ததாக கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து மகாதீருக்கு எதிராக காவல் துறை அறிக்கை தாக்கல் செய்ய அரச ஆணைக்குழு ஒருவர் பரிந்துரைத்துள்ளார்.
தாம் இரண்டாவது முறையாக பிரதமர் ஆனபோது 2018ல் அமைச்சரவைக்கு, தகவல் தெரிவிப்பதற்கு முன்னதாக அந்த மேல்முறையீட்டை கைவிட தாம் தன்னிச்சையாக முடிவு செய்ததாக கூறப்படுவதை மகாதீர் மறுத்தார்.
பத்து பூத்தே தொடர்பான முடிவு அந்த நேரத்தில் அமைச்சரவையால் கூட்டாக எடுக்கப்பட்டது என்பதையும் மகாதீர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
இது அரசியல் நோக்கம் கொண்ட ஒரு நடவடிக்கையாகும் என்று மகாதீர் மேலும் கூறினார்.
ஏற்கெனவே மலேசியாவின் ஊழல் தடுப்பு ஆணையத்தால் விசாரிக்கப்பட்டு வருகிறார். மேலும் அவரது இரண்டு மூத்த மகன்களும் பல மாதங்களாக நீடித்த விசாரணையில் தங்கள் சொத்துக்களை அறிவித்துள்ளனர். இருப்பினும் தவறு ஏதும் நடக்கவில்லை என்று மகாதீர் மறுத்துள்ளார்.
அதே வேளையில், பிரதமர் அன்வார் இப்ராகிம், விசாரணைகளில் தாம் தலையிடவில்லை என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.