வெளிநாட்டு நோயாளிகளுக்கான கட்டண வசூல் குறித்து சுகாதார அமைச்சகம் ஆய்வு

கோலாலம்பூர்:

செப்டம்பர் மாத நிலவரப்படி, மலேசிய குடிமக்கள் அல்லாதவர்கள் செலுத்த வேண்டிய RM36.24 மில்லியன் நிலுவையில் உள்ள நிலையில், சுகாதார அமைச்சகத்தின் நிறுவனங்களில் சிகிச்சை பெற வரும் வெளிநாட்டவர்களுக்கான கட்டண வசூல் நடைமுறைகளை மதிப்பாய்வு செய்து வருகிறது என்று அது தெரிவித்துள்ளது .

“வெளிநாட்டினரின் சிகிச்சை செலவை ஈடுகட்ட, தேவையான நடைமுறைகளை நாங்கள் தற்போது மதிப்பாய்வு செய்து வருகிறோம்” என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Health Services - Refugee Malaysia

நேற்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 10) அமைச்சகம் வெளியிட்டுள்ள எழுத்துப்பூர்வ நாடாளுமன்ற பதிலில், முன்னதாக மலேசிய குடிமக்கள் அல்லாதவர்கள் செலுத்த வேண்டிய சுகாதார வசதிகளுக்காக நிலுவைத் தொகை 9.58% அல்லது RM40.08 மில்லியனில் இருந்து தற்போது RM3.84 மில்லியன் குறைந்துள்ளது என்று அது கூறியது.

இது டிசம்பர் 2023 மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் வெளிநாட்டினரின் மருத்துவ கட்டணத்தை திரும்பப் பெற எடுக்கப்பட்ட நடவடிக்கையின் விளைவு இது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

New hospital fee structure unfair to foreign workers, refugees, says  socialist party

மேலும், “MOH வசதிகளில் சிகிச்சை பெற்ற வெளிநாட்டினருக்கான மருத்துவ பில் செலுத்தும், இதை நிவர்த்தி செய்ய, அமைச்சகம் அதன் வசதிகளில் உள்நோயாளிகளுக்கான சிகிச்சை சேவைகளை தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது என்றும், இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், தனியார் நிறுவனம் தொழிலாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அமைச்சகத்திற்கான வங்கி உத்தரவாதத்தை ஏற்பாடு செய்ய வேண்டும்,” என்றும் அது கூறியது.

“உதாரணமாக, ஒரு தனியார் நிறுவனம் 200 தொழிலாளர்கள் அல்லது அதற்கும் குறைவாக இருந்தால் RM2,500 வங்கி உத்தரவாதத்தை தயார் செய்ய வேண்டும், குறிப்பிட்ட காலத்திற்குள் நிறுவனத்தால் சிகிச்சை பில் தொகையை செலுத்த முடியவில்லை என்றால், அந்த தொகை வங்கி உத்தரவாதத்தில் இருந்து கழிக்கப்படும்” என்று அந்தப்பதிலில் சுகாதார அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here