நோவக் ஜோகோவிக் எடுத்த நல்ல முடிவு..!

சேர்பியாவை சேர்ந்த டென்னிஸ் ஜாம்பவான் நோவக் ஜோகோவிக் அடுத்தாண்டு அதிக போட்டிகளில் விளையாட இருப்பதாக தெரிவித்துள்ளார். ஒரு கட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீரராக இருந்தவர் தான் நோவக் ஜோகோவிக். டென்னிஸ் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் இருந்த ஜோகோவிக் தற்போது ஏழாவது இடத்தில் உள்ளார். அவரது ஆட்டம் முன்பு போல சிறப்பாக இல்லை என்றும், அவர் பார்மில் இல்லை என்றும் சொல்லப்படுகின்றது.

மேலும் ஜோகோவிக் கடைசியாக ஒரு கோப்பையை வென்று சில காலம் ஆகிவிட்டது. எனவே மீண்டும் ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று பார்மிற்கு திரும்பும் முனைப்பில் உள்ளார் ஜோகோவிக். பிரிஸ்பேன் சர்வதேசப் போட்டிக்கு முன் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜோகோவிக், இந்த சீசனுக்கு ஒரு நல்ல துவக்கத்தை எதிர்பார்க்கின்றேன். தொடர்ந்து அனைத்து போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த பார்க்கின்றேன்.

மேலும் கடந்த ஆண்டு விளையாடிய போட்டிகளை விட இந்த ஆண்டு அதிக போட்டிகளில் விளையாட விரும்புகின்றேன். அதனால் என் நிலையும் என் பார்மும் உயரும் என நம்புகின்றேன் என ஜோகோவிக் கூறியிருக்கின்றார். இந்நிலையில் சேர்பியாவை சேர்ந்த 37 வயதான ஜோகோவிக் கடந்தாண்டு தங்கம் வென்றிருந்தார். ஆனாலும் அவர் சமீபகாலமாக ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்லவில்லை.

இது அவருக்கும் அவரது ரசிகர்களுக்கும் சற்று ஏமாற்றத்தை தந்துள்ளது. இருப்பினும் ஜோகோவிக் விரைவில் நல்ல பார்மிற்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதையடுத்து டென்னிஸ் உலகில் big four என அழைக்கப்படும் வீரர்களில் மூன்று பேர் தற்போது நடைபெறும் தொடரில் விளையாடவில்லை. ரஃபேல் நடால், ஆண்டி முர்ரே மற்றும் பெடரர் ஆகியோர் ஓய்வை அறிவித்துவிட்டனர். எனவே அந்த big four என சொல்லப்படும் வீரர்களில் நோவக் ஜோகோவிக் மட்டுமே தற்போது விளையாடி வருகின்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here