மோட்டார் சைக்கிள் விபத்தில் ஜோகூர் சுக்மா தடகள வீராங்கனை உயிரிழப்பு

கோத்தா திங்கி:

நேற்று (ஜன. 1) பண்டார் பெனாவாரின் ஜாலான் டத்தோ ஓன் பகுதியில் நடந்த ஒரு விபத்தில் ஜோகூரின் படகோட்டத்தில் பங்குபற்றிய தடகள வீராங்கனை நூர் ஹசுரா முஹமட் ஹசாஹர் உயிரிழந்தார்.

நேற்று மாலை 4.50 மணியளவில், 21 வயதான நூர் ஹசுரா முஹமட் ஹசாஹர் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது, ​​சாலையில் U-டர்ன் செய்த காரின் பின்புறம் மோதி, அவரது மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.

இவர் 2022 மற்றும் 2024 இல் நடந்த மலேசிய விளையாட்டுப் போட்டிகளில் ஜோகூர் மாநிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here