கோலாலம்பூர் உள்ளிட்ட 4 மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை எச்சரிகை

மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) நான்கு மாநிலங்கள் மற்றும் கோலாலம்பூர் மற்றும் லாபுவான் கூட்டரசுப் பிரதேசங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. சனிக்கிழமை (ஜன. 4) மதியம் 1.10 மணிக்கு வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவுரையில் பேராக், சிலாங்கூர், சபா மற்றும் சரவாக் ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும். இன்று மாலை 5 மணி வரை இந்த அறிவுறுத்தல் உள்ளது. வடகிழக்கு பருவமழை நவம்பர் 5 ஆம் தேதி தொடங்கி மார்ச் 2025 வரை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here