சோதனைச்சாவடியில் நுழைந்த நாய்க்கு உற்சாக வரவேற்பு- ஏன் தெரியுமா?

ஷெங்கன் பிராந்தியத்தின் எல்லை பிரச்சனை முடிவுக்கு வந்ததால் ருமேனியாவும், பல்கேரியாவும் கடந்த 1-ந்தேதி ஐரோப்பிய ஒன்றியத்தின் முழு உறுப்பினராக மாறியது. இதனையடுத்து ஹங்கேரி-ருமேனியா இடையே புதிய எல்லை சோதனைச்சாவடி திறக்கப்பட்டது.

அந்த நேரத்தில் அவ்வழியாக சென்ற ஒரு நாய் அதனை சாவகாசமாக கடந்து சென்றது. இதன்மூலம் ஹங்கேரி-ருமேனியா சோதனைச்சாவடியில் முதன்முதலாவதாக நாய் நுழைந்தது.

இதனையடுத்து அங்கு தயாராக நின்று கொண்டிருந்த ராணுவ வீரர்கள் இரு நாட்டின் தேசியக்கொடிகளை ஏந்தியும், கை தட்டியும் அந்த நாய்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதுதொடர்பான காட்சிகள் அங்குள்ள சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய ராணுவ வீரர்களின் இந்த செயல் லட்சக்கணக்கானோரின் விருப்பங்களையும் பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here