சிங்கப்பூர்:
நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 12) பெட்ரா பிரான்காவுக்கு அப்பால் சிங்கப்பூர் கடல் பகுதியில்மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட கப்பல் மூழ்கியதாகவும், அதில் இருந்த அனைத்து பணியாளர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர் என்றும் சிங்கப்பூர் கடல் மற்றும் துறைமுக ஆணையம் (MPA) தெரிவித்துள்ளது.

நேற்று பிற்பகல் 3.40 மணியளவில் “சில்வர் சின்சியர்” கப்பலுக்குள் நீர் புகுந்துகொண்டிருந்ததாகத் தெரிவித்து ஒரு அழைப்பு வந்ததாக MPA தெரிவித்தது.
மீட்கப்பட்ட ஊழியர்கள் அனைவரும் சீரான உடல்நிலையில் இருப்பதாகவும் அவர்கள் இந்தோனீசியாவின் பாத்து அம்பாரில் இறக்கிவிடப்படுவர் என்றும் சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் தெரிவித்துள்ளது.




















