குவாரி நிறுவனம் ஒராங் அஸ்லி நிலத்தை ஆக்கிரமிக்கவில்லை; பேராக் MP

பீடோரில் ஒராங் அஸ்லியின் மூதாதையர் நிலத்தை ஒரு குவாரி நிறுவனம் ஆக்கிரமித்ததாகக் கூறப்படுவதை பேராக் மந்திரி புசார் சாரணி முகமது மறுத்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக பேராக் நிலம் சுரங்க அலுவலகம் மற்றும் ஒராங் அஸ்லி மேம்பாட்டுத் துறை (ஜகோவா) ஆகியோரிடம் ஆலோசனை நடத்தியதாக சாரணி கூறினார்.

இந்தக் கூற்றுக்களில் எந்த உண்மையும் இல்லை என்று மாநில, மத்திய நிறுவனங்கள் இரண்டும் எனக்குத் தெரிவித்தன என்று அவர் எஃப்எம்டியிடம் கூறினார். கடந்த வாரம், கம்போங் சாங் லாமாவில் உள்ள ஒராங் அஸ்லி சமூகம், குவாரி நிறுவனமான சியோங் எமாஸ் எஸ்டிஎன் பெர்ஹாட் தங்கள் புனித மூதாதையர் நிலத்தை ஆக்கிரமித்ததாகக் கூறியது.

ஒராங் அஸ்லியின் ஒப்புதல் பெறப்படாததால், பழங்குடி மக்களின் உரிமைகள் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனத்தை நிறுவனம் மீறியதாக கிராமத் தலைவர் டாஹில் யோக் சோபில் கூறினார். அந்தப் பகுதியில் உள்ள நிலத்திற்கான நிறுவனத்தின் குத்தகையை ரத்து செய்ய வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார். பூர்வீக நிலத்தைப் பாதுகாக்க மாநில அதிகாரிகள் தவறிவிட்டதாக சுற்றுச்சூழல் குழு பெக்காவும் குற்றம் சாட்டியது.

இருப்பினும், சியோங் எமாஸ் என்ற நிறுவனம் 2066 வரை செல்லுபடியாகும் நில உரிமைகள், குத்தகைகளைக் கொண்டிருப்பதாகக் கூறியது. அதற்கு பதிலாக செம்பனை மரங்கள், சொத்தில் காணப்படும் அடையாளங்களை மேற்கோள் காட்டி, ஒராங் அஸ்லியால் ஆக்கிரமிப்பு ஏற்பட்டதாகக் குற்றம் சாட்டியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here