தாப்பா:
இன்று காலை 8 மணிக்கு திறக்கப்பட்ட இரு வாக்களிப்பு மையங்களும் 5 மணியுடன் மூடப்பட்டதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்று நடைபெற்ற முன் கூட்டியே வாக்களிப்பில் பொதுப் பணியில் இருக்கும் காவல்துறை அதிகாரிகள், தேர்தல் அதிகாரிகள் ஆகியோர் வாக்கு செலுத்தினர்.இந்நிலையில் இன்று 92.8 விழுக்காடு வாக்குகள் பதிவானது
கடந்த பிப்ரவரி 22 அன்று குறித்த சட்டமன்ற உறுப்பினராக இருந்த இஷாம் ஷாருதீன் இறந்ததைத் தொடர்ந்து ஆயிர் கூனிங்கில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இந்த இடைத்தேர்தலில் பாரிசன் நேஷனல் (BN) வேட்பாளர் டாக்டர் முகமட் யூஸ்ரி பக்கீர், பெரிகாத்தான் நேஷனல் (PN) வேட்பாளர் அப்துல் முஹைமின் மாலேக்; மற்றும் பார்ட்டி சோசியலிஸ் மலேசியா (PSM) வேட்பாளர் பவானி கே.எஸ். ஆகியோரிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.