அம்னோ சொத்து விவகாரம்; துன் மகாதீரின் பெயரை நான் குறிப்பிடவே இல்லை என்கிறார் ஜாஹிட்

கோலாலம்பூர்:

அம்னோ சொத்து விவகாரத்தில் துன் மகாதீரின் பெயரை நான் குறிப்பிடவே இல்லை என்று, துணைப் பிரதமரும் அம்னோ தலைவருமான டத்தோஶ்ரீ ஜாஹிட் ஹமிடி கூறினார்.

முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமட் அம்னோ சொத்துக்களின் அறங்காவலரிடமிருந்து பொறுப்புகளை விடுவிக்கும் கடிதத்தில் கையெழுத்திட மறுத்ததாக தாம் குற்றம் சாட்டியதாக அவர் கூறியுள்ளார்.

‘துன் மகாதீரின் இந்த குற்றச்சாட்டை நான் முழுமையாக மறுக்கிறேன்.துன் மகாதீரின் சொத்துக்களின் அறங்காவலராக தனது பொறுப்பை ஒப்படைப்பதில் உண்மையாக இருந்தால், அம்னோ அதைப் பாராட்டுவதாகவும், திறந்த மனதுடன் ஏற்றுக் கொள்ளும்’ என்றும் ஜாஹிட் சொன்னார்.

“நான் துன் மகாதீரின் பெயரை ஒருபோதும் குறிப்பிடவில்லை. செய்தியாளர்கள் கேட்டபோது, ​​நான் ஒருவர் என்று மட்டுமே குறிப்பிட்டேன். இது தான் உண்மை” என்று டத்தோஶ்ரீ ஜாஹிட் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here