மலேசிய கோப்பையை வென்ற ஜேடிடி அணி: வாழ்த்து தெரிவித்த மாமன்னர்

கோலாலம்பூர்: 2024/2025 மலேசிய கோப்பை பட்டத்தை வென்றதற்காக ஜோகூர் டாருல் தாசிம் எஃப்சி (ஜேடிடி) அணிக்கு மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இன்று வாழ்த்து தெரிவித்தார். சுல்தான் இப்ராஹிம் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவில், தெற்கு டைகர்ஸுக்கு உறுதியான ஆதரவை வழங்கிய ஜேடிடியின் விசுவாசமான ரசிகர்களுக்கும் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

ஜேடிடி உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் எங்கு விளையாடினாலும், அவர்களின் ஆதரவாளர்கள் எப்போதும் இருக்கிறார்கள். அவர்கள் உத்வேகம் மற்றும் பலத்தின் ஆதாரமாக இருந்து, அணியின் சண்டை மனப்பான்மையைத் தூண்டி, தொடர்ச்சியான வெற்றியை அடைய அவர்களை ஊக்குவிக்கிறார்கள் என்று அவர் கூறினார்.

ஜேடிடியின் உரிமையாளரான அவரது மகன் துங்கு மகோத்தா இஸ்மாயிலுக்கும் சுல்தான் இப்ராஹிம் வாழ்த்து தெரிவித்தார். ஜோகூர் அணியின் புகழை உலக அரங்கில் உயர்த்தியதன் மூலம், உள்ளூரில் மட்டுமல்லாமல் அனைத்துலக அளவில் பல்வேறு சிறந்த வெற்றிகளை ஜேடிடி பெற்றுள்ளது என்று அவர் கூறினார். நேற்று இரவு புக்கிட் ஜாலீல் தேசிய மைதானத்தில் நடந்த மலேசிய கோப்பை இறுதிப் போட்டியில் ஸ்ரீ பஹாங் எஃப்சியை 2-1 என்ற கணக்கில் தோற்கடித்து ஜேடிடி தனது டிரிபிள் ட்ரெபிள் சாதனையை முடித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here