வாஷிங்டன்:
‘அமெரிக்காவில் அனைத்து லோரி டிரைவர்களுக்கும் ஆங்கில பேச்சு புலமை கட்டாயம்’ என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
இதனால் இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கிய டிரைவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்ற முதல் நாளில் இருந்தே பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அவரது உத்தரவுக்கு ஆதரவும் விமர்சனங்களும் எழுந்து வருகின்றன.
தற்போது அவர், ‘அமெரிக்காவில் உள்ள லோரி டிரைவர்கள அனைவரும் ஆங்கில புலமை பெற்று இருக்க வேண்டும்’என்ற உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இந்த உத்தரவு விமர்சனங்களை கிளப்பி உள்ளது.