டோக்யோவில் உள்ள யாஷியோவில் (Yashio) உள்வாங்கிய ஒரு பெரிய குழியில் லோரி ஒன்று விழுந்ததைத் தொடர்ந்து காணாமல்போன 70 வயதுடைய லோரி ஓட்டுநரின் உடல் நேற்று கண்டுபிடிக்கப்பட்டது.
ஹைட்ரஜன் சல்பைட் ( hidrogen sulfida)வாயு அளவு மற்றும் நீர் ஓட்டம் பாதுகாப்பானவை என்று பரிசோதனை செய்ததைத் தொடர்ந்து இன்று அதிகாலை 2 மணியளவில் தீயணைப்பு மற்றும்
போலீஸ் குழுக்கள் குழாயினுள் நுழைந்தனர்.
சம்பவம் நடந்த இடத்திலிருந்து 30 மீட்டர் தொலைவில் கழிவுநீர் குழாயில் சிக்கிய லாரியில் மனித உடலைப் போன்று காணப்பட்டதாக சைட்டாமா (Saitama) மாநில அதிகாரிகள் உறுதிப்படுத்தினார்கள்.
இவ்வாண்டு ஜனவரி 28 ஆம் தேதி சாலை சந்திப்பில் திடீரென 40 மீட்டர் அகலமும் 15 மீட்டர் ஆழமும் கொண்ட ஒரு புதைகுழி உருவானபோது இந்த துயர சம்பவம் நிகழ்ந்தது தொடர்ந்து மண் இடியக்கூடும் என்ற சாத்தியம் இருந்ததால் மீட்பு நடவடிக்கை கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி நிறுத்தப்பட்டது.