பினாங்கின் ஒன்பதாவது ஆளுநராக ரம்லி பதவியேற்பு

ஜார்ஜ் டவுன்:

ங்குள்ள டேவான் ஸ்ரீ பினாங்கில் நடந்த பதவியேற்பு விழாவில், துன் ரம்லி நகா தாலிப் பினாங்கின் ஒன்பதாவது யாங் டி-பெர்டுவா நெகிரி பூலாவ் (ஆளுநராக) பதவியேற்றார்.

2021 ஆம் ஆண்டு முதல் எட்டாவது பினாங்கு ஆளுநராகப் பணியாற்றிய துன் அஹ்மட் புசி அப்துல் ரசாக்கிற்குப் பிறகு, 84 வயதான ரம்லி நேற்று பதவியேற்றார்.

பினாங்கு உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ ரோசானா அலி யூசோஃப் மற்றும் மாநிலச் செயலாளர் டத்தோ சுல்கிஃப்லி லாங் ஆகியோர் முன்னிலையில் அவர் புதிய ஆளுநராக நேற்று பதவியேற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here