கோலாலம்பூர்,
மலேசியாவில் தமிழர்கள், மலையாளிகள், பெங்காளிகள், சீக்கியர்கள் ஆகிய நான்கு இந்திய சமுதாயத்தினரும் ஏப்ரல் 14ஆம் தேதி அவரவர் புத்தாண்டு தினத்தை மிகச் சிறப்பாகக் கொண்டாடினர். ஒவ்வொருவரும் அவரவர் கலாச்சாரப் பண்புகளுடன் பாரம்பரிய முறைகளில் புத்தாண்டை வரவேற்றுக் கொண்டாடினர்.
இருப்பினும் இந்நாட்டில் நீண்ட காலமாக வாழ்ந்து வரும் சிங்கள சமுதாயத்தின் புத்தாண்டு என்பது மற்றவர்களுளுக்குத் தெரியாமல் இருப்பது. விகவும் வேதனைக்குரியது என்று குறிப்பிட்டமலேசிய வாது சிங்கள் சமுதாயத்தின் தலைவர் ஏ. ஏமதாஸ் வருத்தம் தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பெட்டாலிங் ஜெயா நாமான் ககைபுரத்தில் உள்ள மலேசிய சிங்கள் சங்கத்தின் மண்டபத்தில் சிங்கள புத்தாண்டு கலாச்சார் முறைப்படி கொண்டாடப்பட்டது. அந்நிகழ்ச்சியில் பேசிய ஏமதாஸ், நாட்டில் ஒரு சிறிய எண்ணிக்கையில்தான் சிங்களவர்கள் வாழ்கின்றனர். தாங்கள் பிறந்த நாடு என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கிறோம். மலேசிய மக்கள் தொகையில் நாங்களும் ஓர் அங்கம்தாள். இந்நாட்டின் வளர்ச்சியில் எங்களுடைய பங்களிப்பு இருக்கிறது. அதற்குச் சான்றாக இங்கு வைக்கப்பட்டிருக்கும் கண்காட்சியில் இடம்பெற்ற பல்வேறு அம்சங்கள் அதற்குச் சான்றாகத் திகழ்கின்றன என்று அவர் சொன்னார்.
பல்வேறு பாரம்பரிய கலாச்சாரங்களைத் தங்களுடைய வாழ்க்கையில் பின்பற்றி வருபவர்கள் சிங்களவர்கள். வளமான பாரம்பரியங்களும் எழுச்சிமிகு கலாச்சாரங்களும் எங்களது அடையாளமாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
வருங்காலத்தில் மலேசிய சிங்கள சமுதாயத்தின் புத்தாண்டும் மற்ற இந்திய சமுதாயத்தின் புத்தாண்டு களோடு கொண்டாடப் படுவதை நாங்கள் மிகவும் எதிர் பார்க்கிறோம். சிங்கள மக்கள் நீண்ட நெடிய வரலாற்றுப் பின்னணியைக் கொண்டவர்கள். அழகிய மலேசியாவில் நாங்களும் ஓர் அங்கமாக இருப்பதில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி.
இன்று இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பின்னணிகளைக் கொண்ட பலமுகங்களைக் காண்பது மிகச்சிறப்பாக இருக்கிறது. இவர்களோடு சேர்ந்து புத்தாண்டைக் கொண்டாடுவது எல்லையில்லா மகிழ்ச்சியைத் தருகிறது. உன்னதமான இந்தக் கொண்டாட்டம் மிகச்சிறந்த மனிதநேயத்துடன் எங்களை இணைக்கிறது.
86 ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட எங்கள் சங்கத்தின் தேசியத் தலைவராக இருந்து கடமையாற்றுவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்று அவர் மேலும் தெரிவித்தார். மலேசியாவில் சிங்கள் சமுதாயம் மிகச்சிறிய எண்ணிக்கையில் இருந்தாலும் நாட்டின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி இருக்கிறது.
சிங்கள சமுதாயம் மலேசியா மட்டுமன்றி தென் கிழக்காசியாவிலும் சீனா. ஜப்பான் போன்ற ஆசிய நாடுகளிலும் தடம் பதித்திருக்கின்றனர். எங்கு வாழ்ந்தாலும் எங்களுடைய அடையாளத்தை நாங்கள் இழக்கவில்லை. கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவற்றின் உன்னதத்தையும் நாங்கள் மறந்து விடவில்லை.
மலேசியாவைப் பொறுத்தவரை எங்களின் நன்மதிப்பிற்குரிய ஒரு நாடு. எங்கள் இதயத்தில் ஒரு சிறப்பான இடம் அதற்கு உண்டு என்று ஏமதாஸ் குறிப்பிட்டார். மலேசிய சிங்கள சமுதாயத்தின் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பில் சிங்கள் பாரம்பரிய உணவு வகைகள், இசை, விளையாட்டுப்போட்டிகள்.
ஆகியவை இடம்பெற்றிருந்தது மனநிறைவை அளிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தத் திறந்த இல்ல விருந்துபசரிப்பின் வழி கலாச்சார புரிந்துணர்வுகளைப் பிரபலப்படுத்துவதோடு சமுதாய ஒற்றுமையை வலுப்படுத்துவதாக உள்ளது. அர்த்தமுள்ள பாரம்பரியங்கள். அடுத்தத் தலைமுறையின ருக்குக் கொண்டு செல்லப்படுவதையும் இந்நிகழ்ச்சி உறுதி செய்வதாக இருக்கிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
மலேசியாவின் பண்முகக கலாச்சாரங்கள் சிங்கள், சீக்கிய, தமிழர் படைப்புகள் ஆகியவை இந்த விருந்துபசரிப்பில் இடம்பெற்றன. சிங்கள் கலாச்சார நடனக்குழு பரதநாட்டியம், சீக்கியர்களின் பங்கரா போன்ற நடன நிகழ்ச்சிகளும் விருந்தினர்களை மகிழ்வித்தன.
இந்நிகழ்ச்சியில் மலேசியாவுக்கான ‘ஸ்ரீலங்காவின் இடைக்கால ஹைகமிஷனர் முகமட் ரிஸ்வி இஸ்மாயில் உட்பட சிறப்புப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.