மலேசியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 24 விழுக்காடு வரி விதித்துள்ள நிலையில், அதனை குறைக்கும் வாய்ப்பு இருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், மலேசியா–அமெரிக்கா இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளன.
கடந்த ஏப்ரல் 22 முதல் 24ஆம் தேதி வரை மலேசியாவைப் பிரதிநிதித்து முதலீடு, வர்த்தக, தொழிற்துறை அமைச்சர் தெங்கு டத்தோஶ்ரீ ஸஃப்ருல் வாஷிங்டனுக்குச் சென்று வரி விதிப்பு தொடர்பாக கலந்துரையாடினார்.
இந்த வரி குறைப்புப் பேச்சுவார்த்தைகள் தற்போது ஆரம்ப கட்டத்தில் உள்ளதாகவும், அமெரிக்கா முடிவெடுக்க வேண்டுமானால், ஆசியான் நாடுகளின் ஒத்துழைப்பும் அவசியமாகும் என பிரதமர் அன்வார் குறிப்பிட்டார்.