16 மற்றும் 17 வயது இரண்டு சகோதரர்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர்

16 மற்றும் 17 வயது இரண்டு சகோதரர்கள், சுங்கை கிலாட், கம்போங் லுபோக் கவா (Sungai Gilat, Kampung Lubok Kawah) ஆற்றில் நண்பர்களுடன் மீன்பிடிக்கச் சென்றபோது, பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு, மூழ்கி இறந்திருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

தாத்தாவின் கூற்றுப்படி, மே 1 ஆம் திகதி, அவரும் அவரின் பேரபிள்ளைகளும், பகாங், ரொம்பின் பகுதியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட ஒராங் அஸ்லி இனத்தவர்களும் தர்பூசணி பண்ணையில் வேலை செய்ய வந்ததாக தெரிவித்தார்.

இந்நிலையில் அவ்விரு சகோதரர்களும் அருகாமையிலுள்ள ஆற்றில் குளிக்கும்போது மூழ்கி இறந்துவிட்டதாக அறியப்படுகின்றது. தகவல் அறிந்த குடும்பத்தினர், சம்பவ இடத்திற்கு
விரைந்து சென்று அவர்களைக் கண்டுபிடிக்க முயற்சி செய்து வருவதாகவும் தன் இரண்டு பேரப்பிள்ளைக்களும் விரைவில் கண்டுபிடிக்கப்படுவார்கள் என நம்புவதாக அவர் கண்ணீருடன் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here