கோலாலம்பூர்:
சீன நாட்டவர்களுக்கான 90 நாள் விசா விலக்கு திட்டத்தை தான் ஆதரிப்பதாக சுற்றுலா, கலை, கலாச்சார பண்பாட்டு அமைச்சர் டத்தோஸ்ரீ தியோங் கிங் சிங் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டம் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பயனளிக்கும் என்றும், இதன் அமலாக்கத்தில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் சொன்னார்.
இருப்பினும் இந்த இலவச விசா சலுகையைப் பயன்படுத்தி அவர்கள் சட்டவிரோத வணிக நடவடிக்கைகளில் ஈடுபாட வாய்ப்புள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு அச்சலுகையை அமல்படுத்தாது விடவும் முடியாது என்று
அவர் தனது facebook பக்கத்தில் வெளியிட்டுள்ள ஓர் பதிவில் தெரிவித்தார்.
மேலும் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் நோக்கில் கொள்கைகளை குறைத்து மதிப்பிடுவதற்கு இதை ஒரு சாக்காகப் பயன்படுத்தக்கூடாது என்று கூறிய அவர், இந்த விசா விலக்கு அமலாக்கத்தை மறுப்பதற்குப் பதிலாக, அதன் துஷ்பிரயோகத்தைத் தடுக்க அமலாக்கம், கண்காணிப்பு என்பவற்றை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.