சபா வெள்ளம்; 172 பேர் இன்னமும் நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்

கோத்தா கினபாலு:

இன்று காலை நிலவரப்படி, சபாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 57 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 172 பேர் அங்குள்ள நிரந்தர நிவாரண மையத்தில் (PPK) தங்கியுள்ளனர்.

“மே 3 ஆம் தேதி திறக்கப்பட்ட PPK, பியூஃபோர்ட் மாவட்டத்தில் 10 கிராமங்கள் வெள்ளப் பேரழிவால் பாதிக்கப்பட்டுள்ளதால் இன்னமும் செயல்பாட்டில் உள்ளது” என்று சபா மாநில பேரிடர் மேலாண்மைக் குழு செயலகம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here