ஈப்போ:
பெண்களின் உள்ளாடைகளைத் திருடிய குற்றச்சாட்டில் 48 வயது நபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டார், இந்த குற்றச் செயல் இங்குள்ள மெங்கலெம்பு பகுதியில் உள்ள CCTV யில் பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் நேற்று ஒரு பெண் அளித்த புகாரைத் தொடர்ந்து, காலை 11 மணியளவில் சந்தேக நபரை போலீசார் கைது செய்ததாக ஈப்போ காவல்துறைத் தலைவர் ஏசிபி அபாங் ஜைனல் அபிடின் அபாங் அகமட் தெரிவித்தார்.
45 வயதான புகார்தாரர் வழங்கிய சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், மோட்டார் சைக்கிளில் சென்ற சந்தேக நபர் வீட்டின் முன் நின்று, வீட்டு வாசலில் உலர்த்துவதற்காக வைத்திருந்த உள்ளாடைகளைத் திருடுவதை அது காட்டியதாக அவர் கூறினார்.
கைது செய்யப்பட்ட நபர் நாளை ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்படுவார் என்றும், சந்தேக நபருக்கு முந்தைய குற்றப் பதிவும் எதுவும் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்ததாகவும் அவர் கூறினார்.
“திருட்டுக்கான தண்டனைச் சட்டத்தின் பிரிவு 379 இன் கீழ் நாங்கள் ஒரு விசாரணை மேற்கொள்ளப்படும்” என்று அவர் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.