இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள மலேசியர்கள் மலேசியத் தூதரகங்களைத் தொடர்பு கொள்ள அறிவுறுத்து

இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள மலேசியர்கள், குறிப்பாக மாணவர்கள், அந்நாடுகளில் உள்ள மலேசியத் தூதரகங்களைத் தொடர்பு கொண்டு, முழுமையான தகவல்களை வழங்க வேண்டும் என வெளியுறவு அமைச்சர் டத்தோ ஸ்ரீ முஹமாட் ஹசான் அறிவுறுத்தியுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையே நிகழ்ந்து வரும் எல்லை தாண்டிய தாக்குதல்களைத் தொடர்ந்து
மலேசியர்கள் கவனமாக இருக்கவும் ஆபத்தான பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டனர். மேலும் இதுவரை, எந்த மலேசியர்களும் பாதிக்கப்படவில்லை,” என்று அவர் கூறினார்.

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதற்றங்கள் தொடர்ந்து விஸ்மா புத்ரா உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here