இந்த மாதம் நடைபெறும் கட்சித் தேர்தலில் பிகேஆர் துணைத் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்படாவிட்டால், பொருளாதார அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் ரஃபிஸி ராம்லி சூளுரைத்துள்ளார்.
இந்த சாத்தியக்கூறு குறித்த சிந்தனை தனக்கு ஓரளவு நிம்மதியைத் தந்ததாக ரஃபிஸி கூறினார், ஏனெனில் அமைச்சரவையில் இனி ஒரு பகுதியாக இல்லாதது பல்வேறு பிரச்சினைகள் குறித்துப் பேச அதிக நேரமும் சுதந்திரமும் கிடைக்கும் என்று அர்த்தமாகும் என்று மலேசியாகினி தெரிவித்துள்ளது.
நான் தோற்றால், நான் ராஜினாமா செய்துவிட்டு வழக்கமான நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பேன் என்று அவர் தனது Yang Bakar Menteri podcastஇன் போது கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டது.